டெல்லியில் முகாமிட்டுள்ள அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் – அமித் ஷாவிடம் முக்கிய ஆலோசனை?
அண்ணாமலை, நயினார் நாகேந்திரன்
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகிய இருவரும் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்
மீனவர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்க, மீனவப் பிரதிநிதிகளுடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கரை சந்திக்கும் அண்ணாமலை, தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்த உள்ளார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
அதேநேரம், டெல்லி சென்றுள்ள நயினார் நாகேந்திரன், கட்சியின் செயல்பாடுகள் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த சில மாதங்களில் லண்டன் செல்லும் அண்ணாமலை, சர்வதேச அரசியல் குறித்த வகுப்பில் பங்கேற்கிறார். இதனால், அண்ணாமலைக்குப் பதிலாக, கட்சியின் இடைக்காலத் தலைவரை கட்சித் தலைமை நியமிக்க வாய்ப்புள்ளதாக தகவல் கசிந்து வருகிறது.
விளம்பரம்இதையும் படிங்க: டெல்லி – மும்பை விரைவுச்சாலை பணிகள் 2025 அக்டோபருக்குள் முடிக்கப்படும்: நிதின் கட்கரி!
இந்நிலையில், அண்ணாமலை மற்றும் நயினார் நாகேந்திரனின் டெல்லி பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
- Telegram
- Follow us onFollow us on google news
.Tags:
Annamalai
,
BJP