டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் 3 பேர் உயிரிழந்த விவகாரம்: சிபிஐ விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவு

புதுடெல்லி,

டெல்லியின் பழைய ராஜிந்தர்நகர் பகுதியில் ராவ் ஐஏஎஸ் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. கடந்த 27-ம் தேதி மாலை பெய்த கனமழையால் இந்த பயிற்சி மையத்தின் தரை தளத்தில் வெள்ளம் புகுந்தது. சுமார் 20 மாணவர்கள் உள்ளே சிக்கிக் கொண்ட நிலையில் 17 பேர் மட்டுமே உரிய நேரத்தில் மீட்கப்பட்டனர்.

வெள்ளத்தில் மூழ்கி 2 மாணவிகள், ஒரு மாணவர் என மூன்று பேர் உயிரிழந்தனர். இது மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. உரிய நடவடிக்கை கோரி அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கில் பயிற்சி மைய உரிமையாளர் அபிஷேக் குப்தா, ஒருங்கிணைப்பாளர் தேஷ்பால் சிங் உள்ளிட்ட 7 பேரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் உயர் நிலை விசாரணை கோரி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு, வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்