டெல்லி-வாரணாசி இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

வாரணாசி,

டெல்லியில் இருந்து உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசிக்கு இண்டிகோ விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் இன்று அதிகாலை 5.35 மணிக்கு புறப்பட தயராக இருந்தது. பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏறி, விமானம் கிளம்புவதற்கான நடைமுறைகள் நடைபெற்று வந்தன.

அப்போது விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து, உடனடியாக பயணிகள் அவசரகால கதவு வழியாக வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து ரன்வேயில் இருந்து தனி இடத்திற்கு விமானம் இழுத்து செல்லப்பட்டது. வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் விமானத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்