தங்கம் விலை கடந்த மாதத்தில் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.54 ஆயிரத்தை கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை,
தங்கம் விலை கடந்த மாதத்தில் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.54 ஆயிரத்தை கடந்தது. நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. இந்நிலையில், நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்த நிலையில், இன்று எவ்வித மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.54,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.6,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ.97.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.