தசரா பண்டிகையை முன்னிட்டு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் மூலமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரபட்டிணத்தில் நடைபெறவுள்ள தசரா பண்டிகையை முன்னிட்டு வரும் 03/10/2024 முதல் 16/10/2024 வரை சென்னையிலிருந்து திருச்செந்தூர், குலசேகரப்பட்டிணத்திற்கும் மற்றும் கோயம்புத்தூரிலிருந்து திருச்செந்தூர், குலசேகரப்பட்டிணத்திற்கும் தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதல் பேருந்துகள் இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பண்டிகை முடிந்து திரும்புவதற்கு ஏதுவாக 13/10/2024 மற்றும் 16/10/2024 வரை கூடுதல் பேருந்துகள் இயக்கிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ‘மரியாதை, அங்கீகாரம் இல்லை’ – நாதக முக்கிய நிர்வாகி விலகல்! பரபரப்பு அறிக்கை!!
இதன் காரணமாக பயணிகளின் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துத்துக் கழக பேருந்துகளில் பயணிகள் www.tnstc.in மற்றும் tnstc official செயலி மூலம் முன்பதிவு செய்து மேற்படி ஊர்களுக்கு செல்லவும் மற்றும் அங்கிருந்து திரும்பவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேற்படி பேருந்து வசதியினை பயணிகள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார்.