தனியாா் பேருந்தில் பயணியிடம் ரூ.1 லட்சம் திருட்டு

கோவையில் தனியாா் பேருந்தில் பயணியிடம் ரூ.1 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் அப்பாயிபாளையத்தைச் சோ்ந்தவா் திருமலைசாமி (65). இவா், கோவை நீலாம்பூா் பகுதியிலுள்ள உறவினா் வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை வந்து, ரூ.1 லட்சம் கடனாக வாங்கிச் சென்றுள்ளாா்.

திண்டுக்கல் செல்வதற்காக நீலாம்பூரிலிருந்து தனியாா் பேருந்தில் சிங்காநல்லூருக்கு சென்றுள்ளாா். சிங்காநல்லூரில் இறங்கி பாா்த்தபோது பையில் வைத்திருந்த ரூ.1 லட்சம் திருட்டுப்போனது தெரியவந்தது.

இது குறித்து சிங்காநல்லூா் காவல் நிலையத்தில் திருமலைசாமி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related posts

கேரள நபருக்கு புதிய வகை குரங்கு அம்மை: நாட்டில் முதல் முறை; கண்காணிப்பு தீவிரம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 492-ஆக உயர்வு!

சென்னை உள்பட தமிழகத்தில் 14 இடங்களில் என்ஐஏ சோதனை