நடிகர் தனுஷ் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்கவுள்ளதாகத் தகவல்.
தனுஷ் இயக்கத்தில் இறுதியாக வெளியான ராயன் திரைப்படம் விமர்சனங்களைச் சந்தித்தாலும், ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
தற்போது, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி வருகிறார். இளம் தலைமுறையினரின் காதலைப் பேசும் படமாக உருவாகி வருகிறது.
96 – 2 திட்டத்தில் பிரேம் குமார்!
இந்த நிலையில், அடுத்ததாக தனுஷ் நடிகர் அருண் விஜய்யை வைத்து புதிய படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம். இப்படத்தில் தனுஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்படி உருவானது, இது தனுஷ் இயக்கும் 4-வது படமென்பது குறிப்பிடத்தக்கது.