தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு

விவாகரத்து கோரிய வழக்கில் இன்று நேரில் ஆஜராக நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யாவுக்கு குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

சென்னை,

தமிழில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தமிழில் மட்டுமின்றி ஹாலிவுட் படங்களிலும் பட்டையை கிளப்பி வருகிறார். முன்னணி நடிகரான தனுஷ், நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என 2 மகன்கள் உள்ளனர்.

சமீபத்தில் இருவரும் விவாகரத்து செய்து கொள்வதாக அறிவித்தனர். இவ்விவகாரம் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதனையடுத்து கருத்து வேறுபாட்டால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனித் தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

பரஸ்பரம் விவாகரத்துக் கோரி இருவர் தரப்பிலும் சென்னை குடும்ப நல நீதின்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு மீதான விசாரணை கடந்த 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 7ம் தேதி மனுதாரர் இருவரும் நேரில் ஆஜராகாததால் வழக்கு விசாரணை இன்று (அக்.19ம் தேதிக்கு) ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணைக்கு நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் மீண்டும் ஆஜராகாததால் விசாரணையை நவ.2ம் தேதி ஒத்திவைத்து சென்னை முதன்மை குடும்பநல நீதிமன்ற நீதிபதி சுபா தேவி உத்தரவிட்டுள்ளார்.

#BREAKING ||விசாரணைக்கு ஆஜராகாத தனுஷ் – ஐஸ்வர்யாநடிகர் தனுஷ், ஐஸ்வர்யா பரஸ்பரம் விவாகரத்து கோரிய வழக்கு இருவரும் நேரில் ஆஜராகாததால் வழக்கு விசாரணை நவம்பர் 2ஆம் தேதி தள்ளி வைப்பு#ThanthiTV#Dhanush#Aiswaryapic.twitter.com/gmaAFZYURy

— Thanthi TV (@ThanthiTV) October 19, 2024

Related posts

“சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் சமூக வலைதள வதந்திகள் பெரும் சவால்” – முதல்வர் ஸ்டாலின்

இரிடியம் தருவதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி: 4 போ் கைது

முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி!