தமிழகத்தில் ஆன்மிகமும், அரசியலும் கலக்கத்தான் செய்யும்: உதயநிதிக்கு தமிழிசை பதில்

தமிழகத்தில் ஆன்மிகமும், அரசியலும் கலக்கத்தான் செய்யும் என துணை முதல்வர் உதயநிதிக்கு முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதிலளித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், உதயநிதி தனது எக்ஸ் தளத்தில் கிரிவலம் போக வில்லை, சரி வலம் தான் போனதாக பதிவிட்டு உள்ளார். இடம் போய் கொண்டு இருந்தவர்கள் வலம் போக ஆரம்பித்து இருக்கிறீர்கள். இதுவே ஆன்மிகத்தின் மிகப்பெரிய வெற்றி தான்.

மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என்று கூறி உள்ளார். தேர்தல் ஜனநாயகத்தில் யாரும் நிராகரிப்பட்டவர்கள் கிடையாது. 3 லட்சம் பேர் ஒட்டு போட்டு அங்கீகரித்து உள்ளார்கள். ஆன்மிகமும் அரசியலும் தமிழகத்தில் கலக்கவே கலக்காது என்கிறார் உதயநிதி. சவால் விடுகிறேன் தமிழகத்தில் ஆன்மிகமும் அரசியலும் கலக்கத் தான் செய்யும்.

பிரதமர் மோடிக்கு ரூ.100 அனுப்பிய பழங்குடிப் பெண்! ஏன் தெரியுமா?

அண்ணா வளர்த்தது தமிழ் அல்ல. ஆண்டாள் வளர்த்தது தமிழ். பெரியார் வளர்த்தது தமிழ் அல்ல. பெரியாழ்வார் வளர்த்தது தமிழ். 2026ம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணி முழுமையாக இருக்காது. திருமாவளவன் ஆட்சியில் பங்கு கேட்கிறார். உதயநிதியை தயார் செய்வதால் அங்கு சமூக நிதி இல்லை. பிறகு திருமாவளவனுக்கு அங்கீகாரம் எங்கே கிடைக்கும்.

அரசியலும் ஆன்மிகமும் என்றும் கலக்காது: துணை முதல்வர் உதயநிதி

கம்யூனிஸ்டு கட்சியினர், சாம்சங் தொழிலாளர்களுக்காக போராட்டத்தை முன்னின்று நடத்தியுள்ளனர். ஆட்சியை எதிர்த்து பாட ஆரம்பித்து விட்டார்கள். கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி திமுக கட்சியிலேயே பிரச்னைகள் இருக்கின்றன. 2026ம் ஆண்டு தேர்தல் திமுகவிற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Chinu Kwatra’s dream to make India a developed and happy nation

Tata Soulfull Is Bringing Ancient Superfood Millets To Consumers In Modern Formats

Celebrating Diwali With Social Harmony, Innovation And Creativity