“தமிழகத்தில் வன்னியர், பட்டியல் சமூகங்கள் இணைந்தால் ஆட்சி அதிகாரத்தை எளிதில் கைப்பற்றலாம்” – ராமதாஸ் 

சென்னை: “வன்னியர்கள், பட்டியலினம் இந்த இரு சமுதாயங்களும் இணைந்தால் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை எளிதில் கைப்பற்ற முடியும். அதேபோல், இந்த இரு சமுதாயங்களின் ஆதரவு இல்லாமல் தமிழகத்தில் எவரும் ஆட்சி அமைக்க முடியாது. அவ்வாறு இருக்கும் போது இந்த இரு சமுதாயங்களையும் சேர்ந்தவர்கள் முதல்வராக வர முடியாததற்கு காரணம் என்ன? என்பதை இரு பெரும் சமுதாயங்களும், அவற்றின் தலைவர்கள் என்று கூறிக் கொள்பவர்களும் தான் சிந்திக்க வேண்டும்,” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் எந்தச் சூழலிலும், எந்தக் காலத்திலும் தலித் ஒருவர் முதல்வராக முடியாது என்று விசிக தலைவர் திருமாவளவன் பேசியிருப்பதும், அதற்கு பதிலளிக்கும் வகையில் பட்டியலின மக்கள் ஆதரவளித்தால், பாமக சார்பில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வர் ஆக்கப்படுவார் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பதும், தமிழக அரசியலில் சூடான விவாதத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. சமூகநீதி சார்ந்து இத்தகைய விவாதங்கள் எழுவது வரவேற்கத்தக்கது.

Related posts

ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை ராஜஸ்தான் பயணம்

சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம்… பக்தர்கள் தீபாராதனை காட்டி வழிபாடு

சென்னை மெரினா கடற்கரையில் 2-வது நாளாக விமான சாகச ஒத்திகை