தமிழகத்தில் விபத்துகள் 5% குறைவு!

தமிழகத்தில் அபாயகரமான விபத்துகள் கடந்த ஆண்டை விட 5% குறைந்துள்ளதாக காவல் துறை தலைமை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் 570 பேர் காப்பற்றப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டு ஜூலை மாதம் வரை 10,066 அபாயகரமான விபத்து வழக்குகள் பதிவானதாகவும் அதில் 10,536 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டில் ஜூலை வரை 10,589 மரண விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், 11,106 பேர் உயிரிழந்துள்ளனர்.

நடப்பாண்டில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணித்ததாக மட்டும் 35 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என டிஜிபி அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Mumbai: CBI Initiates Probe Against MTPL Officials In Cheating Case For Over $11 Million Repayment Dues To UCO Bank Singapore

What Are Macadamia Nuts? Learn Its Amazing Health Benefits For Your Body

Guiding Light: Krishna Tattvam