தமிழகத்தில் வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயங்க நாளை முதல் தடை

தமிழகத்தில் நாளை முதல் வெளிமாநில பதிவெண் கொண்ட 547 ஆம்னி பஸ்கள் இயங்க அனுமதி கிடையாது என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் நாளை முதல் இயங்க அனுமதி கிடையாது என போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. தடையை மீறி இயங்கும் ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என்ற ஆம்னி பஸ் உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்க போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் நிராகரித்துள்ளார். அரசின் இந்த உத்தரவால் நாளை முதல் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயக்க முடியாத நிலை உள்ளது.

Related posts

இரிடியம் தருவதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி: 4 போ் கைது

முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி!

சர்ஃபராஸ் கான் சதம்..! மழையினால் பெங்களூரு டெஸ்ட் போட்டி பாதிப்பு!