தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் பொறுப்பேற்பு

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தமிழ்நாடு ரியஸ் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை 1-ந்தேதி தலைமைச் செயலாளராக பதவியேற்ற சிவ்தாஸ் மீனா ஓராண்டுக்கும் மேலாக அந்த பதவியில் இருந்தார்.

சிவ்தாஸ் மீனா மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக தற்போது முதல்-அமைச்சரின் தனி செயலாளராக இருக்கும் முருகானந்தம் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தமிழக அரசின் 50-வது தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐ.ஏ.எஸ். இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

#BREAKING || தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் பொறுப்பேற்பு
தமிழக அரசின் 50-ஆவது தலைமைச்செயலாளராக பொறுப்பேற்றுள்ளார் முருகானந்தம்#TNGovt#Tamilnadu#Secratriat#Muruganandhampic.twitter.com/jv92zC98jv

— Thanthi TV (@ThanthiTV) August 19, 2024

சென்னையைச் சேர்ந்த முருகானந்தம் 1991-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்தார். இவர் பல்வேறு துறைகளில் பணியாற்றியவர். 2001 முதல் 2004-ம் ஆண்டு வரை கோவை மாவட்ட கலெக்டராக பணியாற்றினார். ஊரக வளர்ச்சித்துறையின் இணைச் செயலாளர், டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உறைவிட ஆணையராக பணியாற்றியுள்ளார். மேலும் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தொழில்துறை முதன்மைச் செயலாளராக பதவி வகித்தார்.

Related posts

கேரள நபருக்கு புதிய வகை குரங்கு அம்மை: நாட்டில் முதல் முறை; கண்காணிப்பு தீவிரம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 492-ஆக உயர்வு!

சென்னை உள்பட தமிழகத்தில் 14 இடங்களில் என்ஐஏ சோதனை