தமிழக அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் டெக்னீஷியன்கள் பற்றாக்குறை – பிரச்சினை எங்கே?

மதுரை: தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் ‘டயாலிசிஸ்’ டெக்னீஷியன்கள் பற்றாக்குறை உள்ளதாகவும், புதிதாக 624 டயாலிசிஸ் டெக்னீஷியன்கள் நியமிக்க மருத்துவக் கல்வி இயக்குநரகம் கேட்டுக் கொண்டும் சுகாதாரத் துறை இன்னும் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உலக மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் சிறுநீரகப் பாதிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில், தேசிய அளவில் சிறுநீரக நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், செயலிழந்தவர்களுக்கும் ரத்தம் சுத்திகரிப்பு செய்வதற்கு ‘டயாலிசிஸ்’ சிகிச்சை வழங்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 2,050 டயாலிசிஸ் இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்