தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

மீனவர்களின் மீன்பிடி வலைகளை துண்டித்ததற்கு நஷ்ட ஈடு பெற்றுத்தரவும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

சென்னை,

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படையினர் அவர்களது விசைப்படகுகளுடன் சிறைப்பிடித்து சென்றதால் தமிழக மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.மேலும் நாகை மாவட்ட வெள்ளப்பள்ளம் மற்றும் புஷ்பவனம் மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களின் மீன்பிடி வலைகளை துண்டித்து எடுத்து சென்றனர்.மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசி இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், விசைப்படகுகளையும் மீட்கவும், இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களின் மீன்பிடி வலைகளை துண்டித்ததற்கு நஷ்ட ஈடு பெற்றுத்தரவும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

இனிமேல் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கைகள் தொடரக்கூடாது என்பதை மத்திய அரசு இலங்கை அரசுக்கு கண்டிப்போடு தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related posts

Bigg Boss 18: ‘Ego Massage Karne Ke Liye Eisha Aur Alice..,’ Devoleena Bhattacharjee SLAMS Karanveer Mehra After His Spat With Avinash Mishra

MP: BSP Leader Arrested On Charges Of Molesting A Woman In Jabalpur

‘Don’t Compare Yourself To Unrealistic Beauty Standards’: Priyanka Chopra Shares Tips To Feel Confident