தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய தலைவராக ஓய்வுபெற்ற காவல்துறை தலைமை இயக்குநரை நியமித்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வழக்குரைஞர் பிரிவு அணியினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான வழக்கின் விசாரணையை வருகிற 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற காவல்துறை தலைமை இயக்குநா் சுனில்குமாரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்து. இதுவரை பணியில் உள்ள காவல்துறை தலைமை இயக்குநா் நிலை அதிகாரிகள் மட்டுமே நியமிக்கப்பட்டு வந்த இந்தப் பணிக்கு, இதுவரை இல்லாத வகையில் ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவா் நியமிக்கப்பட்டதற்கு அதிமுக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தது.
இதையும் படிக்க |மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தாழ்தள பேருந்து சேவை துவக்கம்
இந்த நிலையில் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற காவல்துறை தலைமை இயக்குநா் சுனில்குமார் நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து அதிமுக சார்பில் வழக்குரைஞர் இன்பதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு 25 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அதிமுக வழக்குரைஞர் பிரிவு வழக்குரைஞர் இன்பதுரை தெரிவித்தார்.