தமிழ்நாட்டின் சமூக அரசியல் சூழலை தி.மு.க. மாற்றியமைத்துள்ளது – கனிமொழி எம்.பி.

நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தி.மு.க. முப்பெரும் விழா நடைபெறுகிறது.

சென்னை,

அண்ணா பிறந்தநாள் (செப்.15), பெரியார் பிறந்தநாள் (செப்.17), திமுக தொடங்கிய நாள் (செப்.17) என மூன்றையும் இணைந்து ஆண்டுதோறும் முப்பெரும் விழாவை திமுக நடத்தி வருகிறது. இந்த ஆண்டு திமுக தொடங்கப்பட்டு 75வது ஆண்டு என்பதால் மிகச் சிறப்பாக கொண்டாட தமிழ்நாடு முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முடிவெடுத்துள்ளார். அந்த வகையில் இந்த ஆண்டு நாளை (செப். 17) சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுக முப்பெரும் விழா நடைபெறுகிறது.

குறிப்பாக, திமுகவின் முப்பெரும் விழாவில் கட்சியில் சிறப்பாக பணியாற்றுபவர்களை அடையாளம் காட்டும் விதமாக, 1985-ம் ஆண்டு முதல் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டிற்கான விருது பெறுபவர்களும் அறிவிக்கப்பட்டனர். பவளவிழா ஆண்டை குறிக்கும் விதத்தில் 75 ஆயிரம் பேர் அமரும் வகையில் அரங்கு அமைக்கப்படுகிறது. அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள் என அனைவருக்கும் தனித்தனியே பார்க்கிங் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், திமுகவின் தோற்றம் தமிழ்ச் சமூகத்தின் முன்னேற்றத்தில் ஒரு தீர்க்கமான தருணத்தைக் குறிக்கிறது. மூடநம்பிக்கைகளும், மதவாதமும் பெரும்பான்மையினரை ஒடுக்கிய காலத்தில், விளிம்புநிலை மக்களின் வலிமையான குரலாக திமுக உருவெடுத்தது. சோசலிசம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகத்திற்கான அதன் அர்ப்பணிப்பு வளர்ச்சி அனைத்து பகுதிகளையும் சமூகங்களையும் தொடுவதை உறுதி செய்தது.

பெரிய அளவிலான அணிதிரட்டல் மூலம், இந்த இயக்கம் தமிழ்நாடு முழுவதும் பரவியது. நீண்ட காலமாக விதி மற்றும் பிறப்பின் நம்பிக்கைகளால் கட்டுப்படுத்தப்பட்டவர்களுக்கு சமூக நீதி, மொழிவாரி உரிமைகள் மற்றும் மாநில சுயாட்சிக்காக போராட அதிகாரம் அளித்தது. கடந்த 75 ஆண்டுகளில், பெண்களுக்கான சொத்துரிமையைப் பாதுகாப்பது முதல் கல்வி தொழில்துறை, சுகாதாரம் மற்றும் மனித மேம்பாட்டுக் குறியீடு ஆகியவற்றில் தமிழகத்தை முன்னணியில் நிலைநிறுத்துவது வரை திமுக குறிப்பிடத்தக்க மைல்கற்களை எட்டியுள்ளது இந்தியா. திராவிட சித்தாந்தத்தை தழுவியதன் மூலம், தமிழ்நாட்டின் சமூக அரசியல் சூழலை திமுக மாற்றியமைத்துள்ளது என பதிவிட்டுள்ளார்.

The emergence of the DMK marked a defining moment in the progress of Tamil society. In a time when superstition and religious dogma oppressed the majority, DMK emerged as the powerful voice of the marginalised. Its commitment to socialism and inclusive governance ensured that… pic.twitter.com/NsXcrMQF4X

— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) September 16, 2024

Related posts

டி20 தரவரிசைப் பட்டியல்: முதலிடத்தில் லியம் லிவிங்ஸ்டன்!

இப்போது இயக்கியிருந்தால் அம்பிகாபதியை வேறு மாதிரி எடுத்திருப்பேன்: ஆனந்த் எல். ராய்

ஆந்திர வெள்ள நிவாரணம்: ரூ.25 கோடி வழங்கிய அதானி அறக்கட்டளை!