தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஊர்களிலும் இசை நிகழ்ச்சி..! இளையராஜா அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் 1976 ஆம் ஆண்டு ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, 1000 படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார்.

இன்றும் அவர் இசையமைப்பில் உருவாகும் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் கவனத்தையும் பெறுகின்றன. சமீபத்தில் வெளியான மலையாளப் படமான மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படத்திலும் ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலைப் பயன்படுத்தி பெரிய வெற்றியைப் பெற்றனர்.

கடந்த செப்.14ஆம் தேதி கும்பகோணத்தில் ராஜாவின் இசைக் கச்சேரி நடைபெற்றது. மழையிலும் ரசிகர்கள் கலைந்து செல்லாமல் பாடலை கேட்டு ரசித்தார்கள். இது குறித்து தற்போது இளையராஜா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:

இதையும் படிக்க:கமலுடன் யாரையும் ஒப்பிட முடியாது: பிக் பாஸ் 8 குறித்து ரச்சிதா கருத்து!

பெரும் மழையிலும், என் இசை நிகழ்ச்சியை ரசிக்க வந்த கும்பகோணம் மக்களே, உங்களின் ஆதரவை மறக்கமுடியாது. நன்றி! இனி என் இசை பயணம் தலைநகரில் மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஊர்களில் நடைபெறும் எனக் கூறியுள்ளார். இதனால் இளையராஜா ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருக்கிறார்கள்.

கடைசியாக இளையராஜா இசையில் வெளிவந்த ஜமா, விடுதலை படத்தின் இசை பெரிதும் கொண்டாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பெரும் மழையிலும், என் இசை நிகழ்ச்சியை ரசிக்க வந்த கும்பகோணம் மக்களே, உங்களின் ஆதரவை மறக்கமுடியாது. நன்றி! இனி என் இசை பயணம் தலைநகரில் மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஊர்களில் நடைபெறும் pic.twitter.com/MlRvizySkP

— Ilaiyaraaja (@ilaiyaraaja) September 24, 2024

Related posts

செவிலியர்களை கௌரவிக்கும் சிபாகா மிஸ் நைட்டிங்கேல் விருது!

புதிய உச்சத்துக்குப் பிறகு சரிவுடன் முடிந்த சென்செக்ஸ்!

ஒரு பக்கம் விரதம்..! மறுபக்கம் படப்பிடிப்பு..! பவன் கல்யாணின் படப்பிடிப்பு துவக்கம்!