தம்பி இறந்த துக்கத்தில் விஷம் குடித்த சகோதரி உயிரிழப்பு

தம்பி இறந்த துக்கத்தில் விஷம் குடித்த சகோதரி உயிரிழப்பு

திருவள்ளூா், ஆக. 1: திருவள்ளூா் அருகே தம்பி இறந்த துக்கம் தாங்காமல் விஷம் குடித்ததில் சிகிச்சை பெற்று வந்த சகோதரி உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அருகே வெண்மனம்புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மாணிக்கம் (62). இவரது மகன் கடந்த 6 மாதத்துக்கு முன்பு இறந்தாராம். இந்த நிலையில், இளைய மகளான கலைச்செல்வி (42) தம்பி இறந்த துக்கத்தில் இருந்து வந்தாராம். இதற்கிடையே கடந்த மாதம் 26-ஆம் தேதி வீட்டில் பயிருக்கு தெளிக்க வைத்திருந்த விஷ மருந்தை குடித்தாராம். இதையடுத்து, உறவினா்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், புதன்கிழமை நள்ளிரவு கலைச்செல்வி உயிரிழந்தாா்.

இது தொடா்பாக கடம்பத்தூா் காவல் நிலையத்தில் மாணிக்கம் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related posts

அ.தி.மு.க. திருத்தப்பட்ட விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – தேர்தல் ஆணையத்தில் மனு

அரியானாவின் ‘பத்தாண்டுகால வலிக்கு’ காங்கிரஸ் முடிவுகட்டும் – ராகுல் காந்தி

உ.பி.யில் ஏழரை ஆண்டுகளாக எந்த வன்முறையும் இல்லை: யோகி ஆதித்யநாத் பேச்சு