தவறான நிர்வாகத்தால் சிறு தொழில்கள், முறைசாரா துறைகளை மோடி அரசு அழித்துவிட்டது: கார்கே தாக்கு

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

பணமதிப்பிழப்பு, தவறான வரிமுறை (ஜி.எஸ்.டி.), பெருந்தொற்று காலத்தில் நிர்வாகத் திறமையின்மை போன்றவை சிறு, குறு தொழில்கள் மற்றும் முறைசாரா தொழில் பிரிவுகள் மீது தொடர்ந்து தாக்குதலை ஏற்படுத்துகிறது.

முறைசாரா தொழில் பிரிவுகள் இணைக்கப்படாததன் விளைவாக கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் 54 லட்சம் வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இது நரேந்திர மோடி தலைமையிலான அரசு வெளியிட்ட தரவுகளில் உள்ளன. ஆனால் உண்மை என்னவெனில், 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் 2.5 கோடி சிறு, குறு தொழில்கள் முடங்கியுள்ளன.

12 கோடி வேலைவாய்ப்புகளை வழங்கும் 72 சதவீத சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பூஜ்ஜிய வளர்ச்சியை அடைந்துள்ளன. ஜி.எஸ்.டி. வரிமுறையில் உள்ள பல்வேறு அடுக்குகள் சிறு, குறு தொழில் துறைகளை செயலிழக்கச் செய்துள்ளது. முறை சாரா தொழில்களில் ஊக்கத் தொகையின்மை, போதிய விழிப்புணர்வின்மை போன்றவை இவற்றின் அழிவை தீவிரப்படுத்தியுள்ளது.

விவசாயத்தில் 35 பொருள்களுக்கு ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டதால், விவசாயிகளின் வருவாய் குறைந்துள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் உணவுப் பொருள்கள் மீது விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரியால் குடும்பங்களின் சேமிப்பு 50 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்துள்ளது. இருப்பினும், மனித உயிர்களைச் சேராதவர் என தன்னை கூறிக்கொள்ளும் பிரதமர், தங்கள் ஜி.எஸ்.டி.யால் நுகர்வோர் பயன் அடைந்து வருவதாகக் கூறிவருகிறார். தற்பெருமை பேசுவதில் அதிக நேரம் செலவிடுவதை தவிர்த்துவிட்டு, பொருளாதார குழப்பத்தின் உண்மைத்தன்மையை பாருங்கள்"

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Repeated attacks by Demonetisation, Flawed GST and Mismanagement during pandemic by the Modi Govt have ruined our small businesses, MSMEs and the informal sector units!
54 Lakh Jobs have been lost in the past 7 years in the Unincorporated Sector! Modi Govt’s own data tells us… pic.twitter.com/cbK47xhp0d

— Mallikarjun Kharge (@kharge) June 24, 2024

Related posts

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 64 வயது முதியவர் போக்சோவில் கைது

மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

மகனை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை… குடும்பத் தகராறில் விபரீதம்