தவெக மாநாடு விருந்தினர்கள்: விஜய் – ராகுல் காந்தியின் 15 ஆண்டு ‘பந்தம்’ சலசலக்கப்படுவது ஏன்?

தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கிய விஜய் கொடி, பாடல் அறிமுகம் என தன் அரசியல் பயணத்தில் வேகம் காட்டி வருகிறார். தற்போது அக்கட்சி சார்பாக இந்த மாதம் மாநாட்டை நடத்த தீவிரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கு யாரெல்லாம் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்படுவார்கள் என்னும் பேச்சுதான் கடந்த சில தினங்களாக முக்கியமான விவாதமாக மாறியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் ’தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கினார் நடிகர் விஜய். 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை இலக்காக வைத்து தீவிரமாகப் பணியாற்றி வருகிறார். குறிப்பாக, கட்சி மாநாடு நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக பல்வேறு பகுதிகளில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில், விக்கிரவாண்டியில் வரும் 23-ம் தேதி மாநாடு நடைபெறவுள்ளது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் குறித்து காவல் துறை தரப்பில் 21 கேள்விகளுக்கு விடையளிக்குமாறு கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கேள்விக்கான பதிலைத் தயாரித்துள்ளனர். இது குறித்து கட்சித் தலைவர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார்.

Related posts

ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி; சித்தராமையா பதவி விலகலா…? டி.கே. சிவக்குமார் பதில்

6 வயது சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்த தலைமை ஆசிரியர் கைது

திருப்பதி லட்டுவில் குட்கா பாக்கெட் ? தேவஸ்தானம் மறுப்பு