தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு இன்று முன்பதிவில்லா சிறப்பு ரெயில்

சென்னை தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு இன்று இரவு சிறப்பு மெமு ரெயில் இயக்கப்பட உள்ளது.

சென்னை,

வார இறுதி நாளான இன்று சொந்த ஊர் செல்லும் செல்லும் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு சென்னையில் இருந்து திருச்சி சிறப்பு மெமு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. தாம்பரத்தில் இருந்து புறப்படும் இந்த ரெயில் விழுப்புரம், சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூர், வழியாக காலை 6.40க்கு திருச்சி சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மறுமார்க்கத்தில் திருச்சியில் இருந்து ஆகஸ்ட் 11ம் தேதி இரவு 10.30க்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர், கும்பகோணம், சிதம்பரம், விழும்புரம் , செங்கல்பட்டு வழியாக தாம்பரத்திற்கு ஆகஸ்ட் 12ம் தேதி காலை 5.50க்கு வந்தடையும் என்று ரெயில்வே அறிவித்துள்ளது.

Related posts

இந்திய வளா்ச்சியில் பங்கேற்க வேண்டும்: சா்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

பிகாா்: புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்தது

பஞ்சாப் அமைச்சரவை மாற்றம்: 4 போ் நீக்கம்; 5 பேருக்கு பதவி