திருக்கடையூரில் ஒரு கோடி முறை அபிராமி அந்தாதி பாராயண நிறைவு!

உலக நன்மைக்காக கடந்த 2020 முதல் தொடர்ந்து ஒரு கோடி முறை அபிராமி அந்தாதியை பாராயணம் செய்து நிறைவு நிகழ்ச்சி திருக்கடையூர் பிரசித்தி பெற்ற அமிர்தகடேஸ்வரர் அபிராமி கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கோவையைச் சேர்ந்த மேனகாதேவி கங்காதரன், சென்னை உமா பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கரோனா காலத்தில் உலக நன்மைக்காக அபிராமி அந்தாதியை ஒரு கோடி முறை பாராயணம் செய்ய முடிவு செய்தனர்.

அம்பாளுக்கு சாற்றப்பட்ட முத்தங்கி

முல்லைப்பெரியாற்றில் புதிய அணை தேவையில்லை: ‘மெட்ரோ’ ஸ்ரீதரன்

வாட்ஸ் ஆப் குழு மூலம் 1000 பேர் இணைந்தனர். நாள்தோறும் காலை 8.30 மணி முதல் பாராயணம் செய்தனர். கடந்த நான்கரை ஆண்டுகளாக 1 கோடி முறை பாராயணம் செய்தனர்.

அதன் நிறைவு விழா திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதையொட்டி சுவாமி அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அம்பாளுக்கு முத்தங்கி சாற்றப்பட்டது.

திருக்கடையூரில் பிரசித்தி பெற்ற அமிர்தகடேஸ்வரர் அபிராமி கோயிலில் எழுந்தருளியுள்ள அபிராமி தேவி குறித்து அபிராமி பட்டர் இயற்றிய பக்திப் பாடல்களின் தொகுப்பே அபிராமி அந்தாதி. சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டதாகும்.

Related posts

மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி மறுப்பா ? த.வெ.க. விளக்கம்

தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகள் முன்பு விரைவில் முற்றுகை போராட்டம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு