திருப்பதியில் நாளை மறுநாள் தரிகொண்ட வெங்கமாம்பா நினைவு நாள்

வெங்கமாம்பாவின் அவதார தலமான தரிகொண்டாவில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் கல்யாணோற்சவம் நடைபெறுகிறது.

திருப்பதி ஏழுமலையானின் பெருமையை போற்றி பல பாடல்களை இயற்றியவர் துறவி கவிதாயினி தரிகொண்ட வெங்கமாம்பா. ஏழுமலையான் கோவிலில் முதல் முதலில் அன்னதானத்திட்டத்தை தொடங்கி வைத்தவரும், வெங்கடாசலபதியின் தீவிர பக்தையுமான தரிகொண்ட வெங்கமாம்பாவின் 207-வது ஆண்டு நினைவு நாள், அவரின் அவதார தலமான தரிகொண்டாவிலும், திருப்பதி மற்றும் திருமலையிலும் நாளை மறுநாள் (ஆகஸ்டு 13) அனுசரிக்கப்படுகிறது.

தரிகொண்டாவில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் அன்று மாலை 5 மணியில் இருந்து இரவு 7 மணிவரை கல்யாணோற்சவம் நடைபெறுகிறது.

திருப்பதி எம்.ஆர்.பள்ளி சர்க்கிளில் உள்ள வெங்கமாம்பா உருவச்சிலைக்கு காலை 9 மணியளவில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு, திருப்பதியில் உள்ள சுவேத பவனில் காலை 10 மணியில் இருந்து மதியம் 1 மணிவரை இலக்கிய மாநாடு நிகழ்ச்சிகளும், திருமலையில் உள்ள வெங்கமாம்பா பிருந்தாவனத்தில் காலை 9 மணிக்கு புஷ்பாஞ்சலியும் நடத்தப்படுகிறது.

Related posts

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவில் தேரோட்டம்

அமிர்தயோக நேரத்தை அருளிய திருக்கடையூர் அமிர்தநாராயண பெருமாள் கோவில்