திருப்பதி கோவிலில் நாளை அமித்ஷா சாமி தரிசனம்

திருப்பதி,

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார். வாரணாசியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு வந்திறங்கிய அவர், அங்கிருந்து புதுக்கோட்டைக்கு சென்று அங்குள்ள திருமயம் கோட்டை பைரவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

தமிழக பயணத்தை முடித்துக்கொண்டு திருப்பதிக்கு செல்லும் அமித்ஷா நாளை காலை ஏழுமலையானை வழிபட உள்ளார். அமித்ஷா வருகையை முன்னிட்டு, அவர் பயணம் செய்ய இருக்கும் வழித்தடங்கள், விருந்தினர் மாளிகை, ஏழுமலையான் கோவில் வளாகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வெடிகுண்டு நிபுணர்கள் பக்தர்களின் உடைமைகளை சோதனை செய்து வருகின்றனர். சாதாரண உடை அணிந்த போலீசார் பக்தர்கள் கூடும் அனைத்து முக்கிய இடங்களிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

Related posts

கழுதை உயிரிழப்பு – 55 பேர் மீது வழக்குப்பதிவு

பாலியல் புகார்: மலையாள திரைப்பட இயக்குநர் வி.கே. பிரகாஷுக்கு ஜாமீன்

உத்தரகாண்ட்: தண்டவாளத்தில் 6 மீட்டர் நீளமுள்ள இரும்புக் கம்பி – ரெயிலை கவிழ்க்க சதி