திருப்பதி லட்டுவில் குட்கா பாக்கெட் ? தேவஸ்தானம் மறுப்பு

ஐதராபாத்,

திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யின் தரம் குறைந்துள்ளதாக வந்த புகாரைத் தொடர்ந்து, அதனை மத்திய அரசின் ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பி சோதனை செய்து பார்த்ததில், அந்த நெய்யில் மாட்டுக்கொழுப்பு, பன்றிக்கொழுப்பு இருப்பது தெரியவந்தது. இதனை ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பகிரங்கமாக தெரிவித்ததுடன், முந்தைய ஜெகன்மோகன் ரெட்டி அரசு மீது குற்றச்சாட்டையும் கூறினார்.சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி மறுத்துள்ளார். இந்த விவகாரம் பக்தர்கள் மற்றும் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், திருப்பதி லட்டுவில் குட்கா பாக்கெட் இருந்ததாக புகார் எழுந்தது. தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் கொல்லகூடேம் பகுதியை சேர்ந்த பத்மா என்பவர், கடந்த 19ம் தேதி திருப்பதி கோவிலில் வாங்கிய லட்டுவில் குட்கா பாக்கெட் இருந்ததாக வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது புகாரை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் திருப்பதி லட்டுவில் குட்கா பாக்கெட் இருந்ததாக வெளியான புகாரில் உண்மையில்லை என திருப்பதி தேவஸ்தானம் மறுப்பு தெரிவித்துள்ளது . லட்டுவில் குட்கா இருந்ததாக சிலர் தவறான தகவலை பரப்பி வருவதாக தேவஸ்தானம் விளக்கமளித்துள்ளது

Related posts

செவிலியர்களை கௌரவிக்கும் சிபாகா மிஸ் நைட்டிங்கேல் விருது!

புதிய உச்சத்துக்குப் பிறகு சரிவுடன் முடிந்த சென்செக்ஸ்!

ஒரு பக்கம் விரதம்..! மறுபக்கம் படப்பிடிப்பு..! பவன் கல்யாணின் படப்பிடிப்பு துவக்கம்!