திருப்பத்தூர்: மேம்பாலப் பணியில் சாரம் சரிந்து விபத்து- 3 பேர் படுகாயங்களுடன் மீட்பு

திருப்பத்தூர்,

ஆம்பூர் பேருந்து நிலையம் முன்பாக சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலத்தின் கட்டுமான சாரம் திடீரென சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சாரம் சரிந்ததில், புலம்பெயர் தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சாரம் சரிந்து விழுந்த விபத்தில் இதுவரை 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் சிக்கியுள்ள நிலையில் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related posts

திருப்பதி லட்டு விவகாரம்; சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்ய முடிவு

சந்திரபாபு நாயுடு கடவுளிடமே அரசியல் செய்கிறார் – ரோஜா

‘கோவில்களின் நிர்வாகம் பக்தியுள்ள இந்துக்களிடம் இருக்க வேண்டும்’ – சத்குரு ஜக்கி வாசுதேவ்