திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக மங்களூரு சென்டிரலில் இருந்து பாட்னாவிற்கு சிறப்பு ரெயில்

மங்களூரு சென்டிரல் – பாட்னா இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை,

கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் வரும் 4-ந்தேதி மங்களூரு சென்டிரல் – பாட்னா இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடக மாநிலம் மங்களூரு சென்டிரலில் இருந்து வரும் 4-ந்தேதி இரவு 8 மணிக்கு புறப்பட்டு செல்லும் சிறப்பு ரெயில்(வண்டி எண்.03244) புறப்பட்டதில் இருந்து 4-வது நாள் காலை 5.30 மணிக்கு பாட்னா சென்றடையும். இந்த ரெயிலானது மங்களூரு சென்டிரலில் இருந்து போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி மற்றும் பெரம்பூர் வழியாக பாட்னா செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

தூத்துக்குடி: கடல் அலையில் சிக்கி 2 பெண்கள் பலி!

கிருஷ்ணகிரி அருகே தீ விபத்து: தீயணைப்புத் துறை அலுவலர், அவரது தந்தை பலத்த காயம்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை!