திருப்போரூர் அருகே டயர் வெடித்து வேன் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு – 10-க்கும் மேற்பட்டோர் காயம்

திருப்போரூர் அருகே டயர் வெடித்து வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த விட்லாபுரம் மற்றும் அனுபுரம் பகுதியிலிருந்து குன்றத்தூருக்கு சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சுமார் 20 பேர் வேனில் சென்றுள்ளனர். இந்த நிலையில் சுபநிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு திரும்பும்போது, திருப்போரூர் அடுத்த தண்டலம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென வேனின் பின் டயர் வெடித்தது. இதையடுத்து வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்சுகள் மூலம் அருகில் உள்ள திருப்போரூர் மற்றும் பூஞ்சேரி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

#BREAKING | செங்கல்பட்டு, திருப்போரூர் அருகே டயர் வெடித்து வேன் கவிழ்ந்து விபத்து
விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – 10க்கும் மேற்பட்டோர் காயம் #Chengalpattu | #ThanthiTVpic.twitter.com/Uhj6lO9tKO

— Thanthi TV (@ThanthiTV) June 16, 2024

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!