திரைப்படங்களில் மீண்டும் நடிக்கும் எண்ணம் இல்லை: சிராக் பஸ்வான்

திரைப்படங்களில் மீண்டும் நடிக்கும் எண்ணம் இல்லை: சிராக் பஸ்வான்திரைப்படங்களில் மீண்டும் நடிக்கும் எண்ணம் இல்லை என மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார். சிராக் பாஸ்வான்பிடிஐ

இதுகுறித்து பிடிஐ செய்தி ஆசிரியர்களுடன் அவர் உரையாடியதாவது, 2011 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான 'மைலே நா மிலே ஹம்' திரைப்படத்தில் கங்கனா ரணாவத்துடன் அறிமுகமானேன். அந்த படம் தோல்வியை தழுவியது. நான் மிகவும் மோசமான நடிகர்.

கங்கனா உட்பட எந்த இயக்குநரும், தயாரிப்பாளரும் என்னுடன் படம் செய்ய ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அடுத்த ஆண்டு பிகார் தேர்தல் நடைபெற உள்ளது.

அதனால் என்னுடைய முழு நேரத்தையும் அரசியலுக்காக அர்ப்பணிக்க விரும்புகிறேன். குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு திருமணம் செய்துகொள்ளும் திட்டம் இல்லை.

ஏனென்றால் திருமணமும் ஒரு பெரிய பொறுப்பு என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

மக்களவைத் தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சி பிகாரில் 5 இடங்களில் வெற்றி பெற்றது. அதில் கட்சியின் தலைவர் சிராக் பஸ்வான் ஹாஜிபுர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம்வகித்த சிராக் பஸ்வானுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

போக்குவரத்து இணையதளம், செயலி மேம்பாடு: அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் 29-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற இந்திய அணிக்கு ஆளுநர், முதல்வர் வாழ்த்து