தில்லியில் ரூ.2,000 கோடி கொக்கைன் பறிமுதல்: ஒரே வாரத்தில் 2-வது முறை!

மேற்கு தில்லியில் ரூ.2,000 கோடி மதிப்பிலான 200 கிலோ கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு தில்லியின் ரமேஷ் நகர் பகுதியில் தற்போது சோதனை நடந்து வருவதாக அதிகாரிகள் கூறினர். பறிமுதல் செய்யப்பட்ட கொக்கைன் போதைப் பொருள் தொடர்பான மேலும் விவரங்கள் விசாரணையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் தென்மேற்கு தில்லியின் மஹிபால்பூரில் இருந்து ரூ. 5,000 கோடி மதிப்பிலான 562 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதோடு இது தொடர்புடையதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

Related posts

ஒடிசா: வீட்டின் மாடியில் தூங்கிக்கொண்டிருந்த தந்தை-மகள் பாம்பு கடித்து பலி

டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடிக்க ஆர்வம் காட்டும் ஸ்ரேயாஸ் ஐயர்!

வயநாடு, 24 பேரவைத் தொகுதிகள் இடைத்தேர்தல்: வேட்பாளர்களை அறிவித்தது பாஜக