தில்லி தேர்தலில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடும்: பிரியங்கா கக்கர்!

அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரியங்கா கக்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரியங்கா கக்கர் கூறுகையில்,

அதீத நம்பிக்கைக் கொண்ட காங்கிரஸையும், திமிர்பிடித்த பாஜகவையும் தனியாக எதிர்த்துப் போராடும் திறன் எங்களுக்கு உள்ளது. வரவிருக்கும் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும்.

ஹரியாணாவில் கூட்டணிக் கட்சிகளை காங்கிரஸ் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை, அதீத நம்பிக்கையின் காரணமாக இறுதியில் தோல்வியைச் சந்தித்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இதையும் படிக்க: பாலிவுட்டில் அறிமுகமாகும் மடோன் அஸ்வின்?

கடந்த 10 ஆண்டுகளாக தில்லி சட்டப்பேரவையில் காங்கிரஸுக்கு எந்த இடமும் ஒதுக்கப்படவில்லை. இருப்பினும் ஆம் ஆத்மி காங்கிரஸுக்கு மூன்று இடங்களை ஒதுக்கியது. ஹரியாணாவில் கூட்டணிக் கட்சிகளை அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை என்றும் அவர் கூறினார்.

தொகுதிப் பங்கீடு தொடர்பான கருத்து வேறுபாடு காரணமாக ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸும் தேர்தலுக்கு முன் கூட்டணி அமைக்கத் தவறிவிட்டன.

ஆம் ஆத்மி கட்சி ஹரியானாவில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தாலும், காங்கிரஸ் பெரும்பான்மையை விட மிகக் குறைந்துவிட்டது, இது ஆளும் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றிபெற வழிவகுத்தது.

இதையும் படிக்க: பிரதமர் மோடியுடன் ஹரியாணா முதல்வர் சந்திப்பு!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றதற்கு கட்சியின் வளர்ச்சியே காரணம் என்று கக்கர் கூறினார்.

ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை ஜம்மு-காஷ்மீர் செல்ல உள்ளார். மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனது முதல் வெற்றியைப் பதிவுசெய்தது, அதன் வேட்பாளர் மெஹ்ராஜ் மாலிக் தோடா தொகுதியில் பாஜகவின் போட்டியாளரை 4,538 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

மெஹ்ராஜ் மாலிக் மிகவும் கடினமாக உழைக்கும் நபர், அவர் இயக்கம் மற்றும் போராட்ட காலத்திலிருந்து கட்சியில் இருந்து வருகிறார் என்று கக்கர் கூறினார்.

மாவட்ட வளர்ச்சி கவுன்சில் உறுப்பினரான மாலிக், பாஜகவின் கஜய் சிங் ராணா 18,690 வாக்குகளை எதிர்த்து 23,228 வாக்குகள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

UP: BJP Corporator’s Son Marries Pakistan Woman In Online Nikah Ceremony In Jaunpur; Party MLC Attends Function

5 Essential Albums by Indian Guitarists You Need To Hear

Unlock Your Mind : When Chess Meets Visualisation, Math And Logic