தி.மு.க. நாடாளுமன்றக்குழு தலைவராக கனிமொழி நியமனம்

தி.மு.க. நாடாளுமன்றக்குழு தலைவராக கனிமொழி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி அபார வெற்றிபெற்றது.

இந்நிலையில், தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவராக கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

தி.மு.க. நாடாளுமன்ற குழு (மக்களவை, மாநிலங்களவை) தலைவராக கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார்.

மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு நியமிக்கப்பட்டுள்ளார்.

மக்களவை குழு துணைத் தலைவராக தயாநிதிமாறன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மக்களவை கொறடாவாக ஆ.ராசா நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநிலங்களவை குழு தலைவராக திருச்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநிலங்களவை குழு துணைத் தலைவராக சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநிலங்களவை கொறடாவாக வில்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தி.மு.க. நாடாளுமன்ற பொருளாளராக ஜெகத்ரட்சகன் நியமிக்கப்பட்டுள்ளார்

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!