தீபாவளி பண்டிகை: சென்னையில் 4 ரெயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் ரத்து

தீபாவளி பண்டிகை முன்னிட்டு, பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், 4 ரயில் நிலையங்களில் தற்காலிகமாக பிளாட்பார்ம் டிக்கெட் ரத்து செய்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை,

தீபாவளி பண்டிகை வரும் 31-ம் தேதி கொண்டாடவுள்ள நிலையில், திங்கள்கிழமை முதலே பொதுமக்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்ல தொடங்கி விட்டனர். பயணிகள் வசதிக்காக, தெற்கு ரயில்வே சார்பில் 35-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதில், தமிழகத்தில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.வழக்கத்தை விட, பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே, பயணிகள் நெரிசலை தவிர்க்கும் வகையில், சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், பெரம்பூர் ஆகிய 4 ரெயில் நிலையங்களில்வரும் 29,30 ஆகிய தேதிகளில் பிளாட்பார்ம் டிக்கெட் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகிறாரா ஜோஷ் இங்லிஷ்?

சென்செக்ஸ் 603 புள்ளிகளுடனும், நிஃப்டி 158 புள்ளிகளுடன் உயர்ந்து முடிந்த இந்திய பங்குச் சந்தை!

அண்ணா தொடர் நடிகருடன் இணைந்த லப்பர் பந்து பட நடிகை!