துணை கேப்டனாக பும்ரா..! சரியான தேர்வா? ரோஹித் சர்மா கூறியதென்ன?

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஜஸ்பிரீத் பும்ரா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து ரோஹித் சர்மா பேசியதென்ன…

நியூசிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி நாளை (அக்.16) சின்னசாமி மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தொடரில் ஜஸ்பிரீத் பும்ரா இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கான முதல் சில டெஸ்ட்டில் ரோஹித் விலகுவதாக இருப்பதால் இந்த முடிவு எடுத்திருக்கலாமென பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது:

பும்ரா அதிகமாக கிரிக்கெட் விளையாடி இருக்கிறார். நானும் அவருடன் சேர்ந்து அதிகமாக விளையாடியிருக்கிறேன். ஆட்டத்தின் போக்கை சரியாக புரிந்துகொள்வார். சிறந்த முடிவெடுக்கும் திறன் பெற்றவர். அவருடன் பேசும்போது, ஆட்டத்தினை சரியாக புரிந்துகொண்டிருப்பது தெரியும்.

பும்ரா கேப்டனாக அதிகமான போட்டிகளில் விளையாடவில்லை. அதனால், என்னால் அது குறித்து பேச முடியாது. 1 டெஸ்ட் போட்டி, சில டி20களில் மட்டுமே பும்ரா கேப்டனாக செயல்பட்டுள்ளாரென நினைக்கிறேன்.

அணிக்கு தேவையானதை புரிந்துகொள்வார். கடினமான சூழநிலையில் தலைவன் ஒருவன் தன்னை முன்னிருத்த வேண்டுமானால் நிச்சயமாக பும்ரா அந்த நபர்களில் இருவராக இருப்பார். அதனால், முந்தைய காலங்களில் பும்ரா எங்களது முடிவெடுக்கும் தலைமையிலான குழுவில் இருந்துள்ளார்.

புதியதாக அணியில் ஒரு பந்துவீச்சாளர் வந்தால் அவரிடம் பேசுவதாகட்டும் அல்லது அணியாக அடுத்தகட்டத்துக்கு முன்னேறுவதாகட்டும் பும்ரா எப்போதும் எங்களது முடிவெடுக்கும் தலைமையிலான குழுவில் இருந்துள்ளார். அதனால் அவர் இந்த மாதிரி விஷயங்களில் முடிவெடுக்க சிறந்த நபராக இருப்பார் என்றார்.

பும்ரா கேப்டனாக செயல்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது