துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசுக்கு துணையாக இருப்பார்: சபாநாயகர் அப்பாவு

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசுக்கு துணையாக இருப்பார் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.

சென்னை,

சென்னையில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழ்நாடு முழுவதும் சாமானிய மக்களுக்கு இந்த அரசு நிறைய பணிகளை செய்து கொண்டு இருக்கிறது. அது இன்னும் வேகமாக செயல்படுவதற்கு, துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த அரசுக்கு துணையாக இருப்பார்.

இந்தியாவில் எந்த பதவி வழங்கினாலும் விமர்சனங்கள் இல்லாமல் இல்லை. பிரதமருக்கு விமர்சனம் இல்லையா? முதல்-அமைச்சருக்கு விமர்சனம் இல்லையா? விமர்சனம் செய்யதான் செய்வார்கள் அதான் அரசியல். எதிர்க்கட்சிகள், ஆளும் கட்சியின் நிறை, குறைகளை சுட்டிக்காட்டுவது அது மக்களுக்கு நன்மையான காரியமாகும். குறை சொல்பவர்கள் எந்த தவறும் செய்யாத மனிதன் மீது எந்த குறையும் கூறக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

பிளேயிங் லெவனில் இடம்பெற கே.எல்.ராகுல், சர்ஃபராஸ் இடையே போட்டி: இந்திய அணி பயிற்சியாளர்

அமெரிக்க அதிபர் தேர்தல்: தமிழ் உள்பட இந்திய மொழிகளில் வழிமுறைகள்

சென்னையில் ‘இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டம்’ – பெண்கள் விண்ணப்பிக்கலாம்!