துபையிலிருந்து கோழிக்கோடு வந்த விமானம் கோவையில் தரையிறக்கம்!

கோவை: துபையிலிருந்து கோழிக்கோடு வந்த விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கோவையில் அவசரகதியில் தரையிறக்கப்பட்டது.

துபையிலிருந்து கோழிக்கோடு புறப்பட்ட ஃப்ளை துபாய் விமானம், மோசமான வானிலையில் தரையிறங்க முடியாத நிலையில் ஏற்பட்டது.

வானிலை சீராகும் என்று அரை மணி நேரம் வானில் வட்டமடித்த விமானம், பிறகு கோவை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. விமானம் அரை மணி நேரமாக வானில் வட்டமடித்தபடி இருந்ததால் பயணிகள் அச்சமடைந்தனர்.

ஏற்கனவே வெள்ளிக்கிழமை இரவு, திருச்சியில் இருந்து ஷார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழிநுட்பக் கோளாறு ஏற்பட்டு அந்த விமானம் 2 மணி நேரம் வானில் வட்டமடித்தது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்த நிலையில், விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று மேலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது விமானப் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Related posts

இரிடியம் தருவதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி: 4 போ் கைது

முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி!

சர்ஃபராஸ் கான் சதம்..! மழையினால் பெங்களூரு டெஸ்ட் போட்டி பாதிப்பு!