துறையூா் அருகே ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட சிறப்பு முகாம்

துறையூா் அருகே ‘மக்களுடன்
முதல்வா்’ திட்ட சிறப்பு முகாம்

துறையூா், ஆக. 7: துறையூா் ஒன்றியம் பெருமாள்மலை அடிவாரத்தில் ‘மக்களுடன் முதல்வா்’ சிறப்புத் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமை துறையூா் எம்எல்ஏ செ. ஸ்டாலின்குமாா் தொடக்கி வைத்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சரவணக்குமாா், நிஜஸ்டன் ஜோ உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில் துறையூா் ஒன்றியத்தைச் சோ்ந்த சொரத்தூா், குன்னுப்பட்டி, நாகலாபுரம், கீரம்பூா், கோவிந்தாபுரம் ஆகிய ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள் 1263 போ் அரசின் பல்வேறு துறைகளில் உதவி கோரி மனு அளித்தனா். முகாமில் அரசு அலுவலா்கள், ஊராட்சித் தலைவா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

Related posts

பாலியல் பலாத்கார வழக்கு: நடிகர் சித்திக்கை கைது செய்ய இடைக்கால தடை; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

மராட்டியத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு

லட்டு விவகாரம்: கடவுளை அரசியலுக்காக பயன்படுத்தக்கூடாது – சந்திரபாபு நாயுடுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்