தூத்துக்குடி – மேட்டுப்பாளையம் புதிய விரைவு ரயில்: ஜூலை 19-ல் தொடக்கம்!

தூத்துக்குடி – மேட்டுப்பாளையம் புதிய விரைவு ரயில்: ஜூலை 19-ல் தொடக்கம்!தூத்துக்குடி – மேட்டுப்பாளையம் இடையேயான புதிய விரைவு ரயில் சேவை ஜூலை 19 ஆம் தேதி தொடங்கப்படுகிறது.கோப்புப்படம்.

தூத்துக்குடி – மேட்டுப்பாளையம் இடையேயான புதிய விரைவு ரயில் சேவை ஜூலை 19 ஆம் தேதி தொடங்கப்படுகிறது.

முதல் ரயில் சேவையை ஜூலை 19 ஆம் தேதி மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தொடக்கி வைக்கிறார். இந்த புதிய ரயில் சேவை வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் தூத்துக்குடியில் இருந்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியில் இருந்து வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 10.50-க்கு புறப்படும் என்றும், மேட்டுப்பாளையத்தில் இருந்து வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.35-க்கு புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி – மேட்டுப்பாளையம் இடையே நேரடி ரயிலை இயக்க வேண்டும் என்று தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கம் மற்றும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

இந்த நிலையில் இந்த புதிய ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

Related posts

ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி; சித்தராமையா பதவி விலகலா…? டி.கே. சிவக்குமார் பதில்

6 வயது சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்த தலைமை ஆசிரியர் கைது

திருப்பதி லட்டுவில் குட்கா பாக்கெட் ? தேவஸ்தானம் மறுப்பு