தென்காசி: மகன் இறந்த துக்கம் தாங்காமல் தந்தை எடுத்த விபரீத முடிவு

தென்காசி அருகே மகன் இறந்த துக்கம் தாங்காமல் தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி,

தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் அமைந்துள்ள காமாட்சி தெருவைச் சேர்ந்தவர்கள் செல்வகுமார்-ஜெயலட்சுமி தம்பதி. இவர்களது 8 வயது மகன் அசோக், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் படித்து வந்தான். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, வீட்டில் இருந்து, கொண்டு சென்ற மதிய உணவை பள்ளியில் வைத்து சாப்பிட்ட பின்பு வாந்தி மயக்கம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தான்.

இதனைத் தொடர்ந்து மகன் இறப்பை தாங்க முடியாத செல்வகுமார், ஓடும் ரெயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றார். இதையடுத்து காயங்களுடன் செல்வகுமாரை மீட்ட ரெயில்வே பாதுகாப்பு படையினர், தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை அனுமதித்தனர்.

இந்த நிலையில் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பிய செல்வகுமார், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். செல்வகுமாரின் உடலை மீட்ட போலீசார், சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!