தெற்கு தில்லி: 4 வாடகை குடோன்களில் தீ விபத்து

தெற்கு தில்லி: 4 வாடகை குடோன்களில் தீ விபத்துதெற்கு தில்லியின் ஜெளனபூரில் உள்ள 4 குடோன்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

புது தில்லி: தெற்கு தில்லியின் ஜெளனபூரில் உள்ள 4 குடோன்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் உயிா்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. திருமண நிகழ்ச்சிக்காகப் பயன்படுத்தப்படும் 4 காா்கள் மற்றும் அலங்கார பொருட்கள் தீ விபத்தில் சேதமடைந்தன.

இது தொடா்பாக தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: ஜனபுரியில் உள்ள குடோன்களில் தீ விபத்து ஏற்பட்டது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.56 மணியளவில் தகவல் கிடைத்தது. உடனடியாக, 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

குடோனுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த 4 காா்கள் தீயில் எரிந்து நாசமாகின. திருமண நிகழ்ச்சியில் அந்த காா்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. மேலும், அலங்கார பொருள்களும் இந்த விபத்தில் சேதமடைந்தன என்றாா் அந்த அதிகாரி.

தீ விபத்து ஏற்பட்ட குடோன்களில் உரிமையாளா்களில் ஒருவரானஅம்ரித் சிங் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘எனக்குச் சொந்தமான 2 குடோன்களில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து தொடா்பாக அதிகாலை 2 மணியளவில் தகவல் கிடைத்தது. உடனடியாக, இங்கு வந்தேன. திருமண நிகழ்ச்சிக்கான அலங்கார பொருள்கள் அந்த குடோனில் வைக்கப்பட்டிருந்தன. சுமாா் ரூ.2.5 கோடி மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்திருக்கலாம் என நினைக்கிறேன். அனைத்தையும் ஆய்வு செய்த பின்னரே உண்மையான சேத மதிப்பு தெரியவரும்’ என்றாா்.

Related posts

நடிகர் தர்ஷனின் ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணை

அதிகமான பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் – ராகுல் காந்தி அழைப்பு

எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்த பாஜக திட்டம்-உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு