தெற்கு லெபனான் மக்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டாமென இஸ்ரேல் எச்சரிக்கை!

இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே மோதல் நடைபெற்று வரும் வேளையில் தெற்கு லெபனான் பகுதியிலுள்ள மக்கள் தங்களின் வீடுகளுக்குத் திரும்ப வேண்டாமென இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது.

”இஸ்ரேல் ராணுவத்தினர் உங்களின் கிராமங்கள் மற்றும் இருப்பிடங்கள் அருகிலுள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரின் தங்குமிடங்களைக் குறிவைத்து வருகின்றனர். அதனால், மறு அறிவிப்பு வரும்வரை உங்களின் சொந்த பாதுகாப்புக்காக உங்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டாமென எச்சரிக்கிறோம்” என்று இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் அவிச்சே அட்ரே தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: போர் மேகம்.. அணுகுண்டு வீச்சில் உயிர்பிழைத்தோர் அமைப்புக்கு நோபல்! காரணம்?

பலமுனைப் போரில் ஈடுபட்டு வரும் இஸ்ரேல், பாலஸ்தீனின் காஸாவுக்கு எதிராகத் தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருகிறது.

இன்று காலை, இஸ்ரேலிய அதிகாரிகள் காஸா அருகிலுள்ள ஷேக் ரவடான், தெற்கு ஜபாலியா முகாமிலிருந்து அனைவரையும் வெளியேறுமாறு அறிவிப்பு வெளியிட்டனர்.

இந்த நிலையில், லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலில் ராணுவப் பகுதிகளுக்கு அருகிலுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்தனர்.

எதிரிகளான இஸ்ரேலிய ராணுவத்தினர் வடக்கு இஸ்ரேலில் குடியிருப்புகளைப் பாதுகாப்புக்காகப் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, இஸ்ரேலின் திபெரியாஸ், ஹைஃபா, ஆக்ரே நகரங்களில் ராணுவப் பகுதிகளுக்கு அருகிலுள்ள மக்கள் அந்தப் பகுதிகளை விட்டு வெளியேறுமாறு ஹிஸ்புல்லா அமைப்பினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: லெபனானில் 22 பேர் பலி

முன்னதாக, இஸ்ரேல் தெற்கு லெபனானிலுள்ள ஐநா அமைதிப்படை தலைமையகம் மீது நடத்திய தாக்குதலில் இரு அதிகாரிகள் படுகாயமடைந்ததாகவும், கடந்த 24 மணி நேரத்தில் 60 பேர் கொல்லப்பட்டு, 168 பேர் படுகாயமடைந்ததாகவும் லெபனான் சுகாதாரத் துறை அமைச்சர் நேற்று (அக். 11) பேசுகையில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதலில் தற்போது வரை 2,229 பேர் கொல்லப்பட்டு 10,380 பேர் காயமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

இரிடியம் தருவதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி: 4 போ் கைது

முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி!

சர்ஃபராஸ் கான் சதம்..! மழையினால் பெங்களூரு டெஸ்ட் போட்டி பாதிப்பு!