தெலங்கானாவில் காங். தலைவர் குத்திக் கொலை!

தெலங்கானாவில் உள்ள ஜக்தியால் மாவட்டத்தில் ஆளும் காங்கிரஸ் தலைவர் அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜக்தியால் மாவட்டத்தில் உள்ள ஜபிதாபூர் கிராமத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார் மரு கங்காரெட்டி(56). அவர் மீது கார் மோதியது. அவர் கீழே விழுந்ததும், காரில் இருந்து நபர் கீழே இறங்கி அவரை கத்தியால் குத்திக் கொன்றார்.

இதையும் படிக்க: வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

கங்காரெட்டியின் உடல் ஜக்தியாலில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இறந்தவர் எம்எல்சி ஜீவன் ரெட்டியின் நெருங்கிய கூட்டாளி என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.

இதையும் படிக்க:ரஷியா புறப்பட்டார் மோடி!

குற்றம் சாட்டப்பட்ட ஜீவன் ரெட்டிக்கும், இறந்தவருக்கு இடையே ஏற்பட்ட முன்விரோதம் கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இதனிடையே குற்றம் சாட்டப்பட்டவர் தலைமறைவாகிவிட்டதாகவும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் போலீஸார தெரிவித்தனர்.

Related posts

ரஷியா சென்றடைந்தார் மோடி!

யூடியூபர் இர்ஃபானுக்கு மன்னிப்பு கிடையாது: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!