தெலுங்கானா: காங்கிரஸ் கட்சியில் இணைந்த 8-வது பி.ஆர்.எஸ். எம்.எல்.ஏ.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலத்தின் ராஜேந்திர நகர் தொகுதி பி.ஆர்.எஸ். எம்.எல்.ஏ. பிரகாஷ் கவுட், அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி முன்னிலையில் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவரை காங்கிரஸ் நிர்வாகிகள் வரவேற்றனர்.

ஏற்கனவே அண்மையில் கட்வால் தொகுதி எம்.எல்.ஏ. பண்ட்லா கிருஷ்ணமோகன் ரெட்டி, ஜக்திலால் தொகுதி எம்.எல்.ஏ. ஜேஜெய் குமார், முன்னாள் சட்டசபை சபாநாயகர் மற்றும் பன்ஸ்வாடா தொகுதி எம்.எல்.ஏ. ஸ்ரீனிவாஸ் ரெட்டி, செவல்லா தொகுதி எம்.எல்.ஏ. யாதய்யா ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்திருந்தனர். இதுவரை பி.ஆர்.எஸ். கட்சியைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மும்பை: பாலியல் பலாத்கார குற்றவாளி போலீசாருடனான துப்பாக்கி சூட்டில் பலி

பலாத்காரத்திற்கு ஆளான மகளை 2 மகன்களுடன் சேர்ந்து பெற்ற தாயே தீர்த்து கட்டிய கொடூரம்

ஜம்மு காஷ்மீர் தேர்தல் – வாக்குறுதிகளை அறிவித்த ராகுல் காந்தி