‘தேர்தல் ஆணையம் சுதந்திரமானது என்பது எதிர்கட்சிகளுக்கு தெரியும்’ – சிவராஜ் சிங் சவுகான்

போபால்,

மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான், நாடாளுமன்ற தேர்தலில் விதிஷா மக்களவை தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்டார். இந்த தேர்தலில் அவர் 8,21,408 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில், தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படக்கூடியது என்பது எதிர்கட்சிகளுக்கு தெரியும் என சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-

"நமது தேர்தல் ஆணையம் சுதந்திரமானது மற்றும் நடுநிலையானது என்பது உலகத்திற்கே தெரியும். எதிர்கட்சிகளுக்கும் இது நன்றாக தெரியும். ஆனால் சில நேரங்களில் அவர்கள் இதை ஏற்றுக்கொள்வது இல்லை. இந்தியாவின் ஜனநாயகம் உலகிற்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல்கள் இந்தியாவின் சிறப்பம்சமாகும். வாக்குகளின் சக்தியால் நமது நாட்டில் பல ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன."

இவ்வாறு சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்