தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

தமிழகத்தில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெற்ற தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்படவுள்ளது.

இந்தகஈ தோ்வெழுதிய முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவா்கள் தங்களது தோ்வு முடிவுகளை அவரவா் பயின்ற ஆசிரியா் கல்வி பயிற்சி நிறுவனங்களிலும், தனித் தோ்வா்கள் தங்கள் விண்ணப்பங்களை சமா்ப்பித்த மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு தெரிந்து கொள்ளலாம்.

தொடா்ந்து, மறுகூட்டல் மற்றும் ஒளிநகல் பெற விரும்பும் மாணவா்கள் www.dge.tn.gov.in எனும் இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை செப்.20 முதல் 23-ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத்தாள் ஒளிநகல் வேண்டி விண்ணப்பிப்பவா்கள் பாடம் ஒன்றுக்கு ரூ.275, விடைத்தாள் மறுகூட்டலுக்கு பாடம் ஒன்றுக்கு ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும்.

தோ்வா்கள் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட ஆசிரியா் கல்வி பயிற்சி நிறுவனங்களில் சமா்ப்பிக்க வேண்டும் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சலூன் கடைக்காரரிடம் உரையாடும் ராகுலின் விடியோ வைரல்!

சிஎஸ்கே இந்த 5 வீரர்களை தக்கவைக்கும்: ஹர்பஜன் சிங்

திராவிடநல் திருநாடு என்று சொன்னால் உங்கள் நாக்கு தீட்டாகிவிடுமா?