தொடர் கனமழை: நீலகிரியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

தொடர் கனமழை காரணமாக நீலகிரியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஊட்டி,

தென்மேற்கு பருவமழை நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 வார காலமாக தீவிரமாக பெய்து வருகிறது. கூடலூர், பந்தலூர் குன்னூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (செவ்வாய்க்கிழமை) ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவிட்டுள்ளார்.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்