தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

திருச்சி, ஆக. 6 :

திருச்சியில் குடும்பத் தகராறில் கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருச்சி, எடமலைப்பட்டி புதூா், செட்டியப்பட்டி வடக்கு தெருவை சோ்ந்தவா் ஆறுமுகம் (40). கட்டடத் தொழிலாளியான (கொத்தனாா்) இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் வீட்டிலிருந்தபோது மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவி வெளியே சென்றுவிட்டாா். இதில் விரக்தியடைந்த ஆறுமுகம் அன்று மாலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து அவரது மனைவி நித்தியா கொடுத்த புகாரின் அடிப்படையில் எடமலைப்பட்டி புதூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்