தொழில்நுட்ப காரணங்களால் பாஸ்போர்ட் சேவை இணையதளம் 3 நாட்கள் இயங்காது என அறிவிப்பு

புதுடெல்லி,

தொழில்நுட்ப காரணங்களால் பாஸ்போர்ட் சேவை இணையதளம் வரும் 29-ந்தேதி முதல் 3 நாட்களுக்கு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக பாஸ்போர்ட் சேவை இணையதளம் வரும் ஆகஸ்ட் 29-ந்தேதி இரவு 8 மணி முதல் செப்டம்பர் 2-ந்தேதி காலை 6 மணி வரை இயங்காது.

ஆகஸ்ட் 30-ந்தேதிக்கான அனைத்து நேர்காணல்களும் ரத்து செய்யப்படுகின்றன. அன்றைய தினத்தில் நேர்காணல் உறுதி செய்யப்பட்டிருந்த விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அடுத்த நேர்காணல் குறித்த தகவல் தெரிவிக்கப்படும்.

சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள பொது விசாரணை நேர்காணல் அலுவலகம் ஆகஸ்ட் 30-ந்தேதி மட்டும் செயல்படாது."

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kind Attention @passportsevameapic.twitter.com/YjMEsd8TgS

— RPO Chennai (@rpochennai) August 27, 2024

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்