த.வெ.க. மாநாடு: பணிகளை மேற்கொள்ள குழுக்கள் அமைக்க திட்டம்

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு அடுத்த மாதம் (அக்டோபர்) 27-ந் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது.

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாட்டை இம்மாதம் 23-ந் தேதியன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை பகுதியில் நடத்துவதாகவும், அதற்கான பாதுகாப்பு மற்றும் அனுமதி கேட்டு ஏற்கனவே காவல்துறையிடம் அக்கட்சியினர் மனு கொடுத்தனர்.

இதையடுத்து 33 நிபந்தனைகளுடன் மாநாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் காவல்துறை சார்பில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை நடைமுறைப்படுத்துவதில் போதிய நாட்கள் இல்லை என்பதாலும், இதனிடையே விஜய் நடித்த கோட் திரைப்படம் வெளியானதாலும், மாநாடு தேதி தள்ளிப்போனது.

மாநாட்டை எந்த தேதியில் நடத்தலாம் என்று கட்சி நிர்வாகிகளுடன் விஜய் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு அடுத்த மாதம் (அக்டோபர்) 27-ந் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் நடத்தப்படும் என்று நேற்று முன்தினம் நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மாநாடு நடைபெறும் தேதி மாற்றப்பட்டுள்ளதையடுத்து அந்த தகவலை மீண்டும் மனு மூலம் காவல்துறையிடம் கொடுத்தனர்.

இந்த நிலையில், விக்கிரவாண்டியில் அக்டோபர் 27-ந் தேதி நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு பணிகளை மேற்கொள்ள 23 முதல் 30 குழுக்கள் வரை அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநாட்டு நிர்வாகக் குழு, நிதிக்குழு, சட்ட ஆலோசனைக் குழுக்கள் என அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 6 முதல் 12 நபர்கள் வரை இடம்பெறுவார்கள் என கூறப்படுகிறது. மாநாட்டிற்கு ஒரு வாரத்திற்கு முன்பே அனைத்து பணிகளையும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வு நியாயமாக இருக்க வேண்டும்: பொதுக்குழு கூட்டத்தில் கமல்ஹாசன் பேச்சு

மாமியார் தலையில் கல்லை போட்டு கொன்ற மருமகள்… கரூரில் பயங்கரம்

சென்னை கடற்கரை – தாம்பரம் மின்சார ரெயில் சேவை நாளை ரத்து